ஆண்கள் தோடு அணியும் கலாச்சாரம் நமது சமூகத்தில் காலங்காலமாக உள்ளது. ஆண்கள் இடது காதில் அணியும் தோடினை கடுக்கன் என அழைப்பர். கடுக்கன் தோடு ஆனது ஆண்களின் காதில் ஒரு புள்ளி வைத்தது போன்று அழகாக இருக்கும். அது பெண்களின் தோடு, கம்மல் போன்று தொங்காது.
ஆனால் ஆண்கள் தோடு அணிவதன் பின்னால் ஒரு சூட்சமமும் உள்ளதாம். ஆமாங்க, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தாம் தன்பாலீர்ப்பு(Gay, Bisexual Men) உடையவர்கள் என்பதை வெளிக்காட்ட ஆண்கள் தமது வலது காதில் வளையம் போன்ற தோடு அணிவார்களாம்.
அதற்குக் காரணம், எந்தவொரு பெண்ணும் தம்முடன் கலவியில் ஈடுபட நெருங்கி ஏமாறும் சந்தர்ப்பத்தைக் குறைப்பதற்காக ஆகும்.
ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான காதணிகள்
பெண்கள் யாராவது அவர்களை நெருங்கிப் பழக, அல்லது படுக்க அழைத்தால், அவர்கள் கண்ணில் படும் வகையில் Gay, Bisexual Men தமது தோடினை அவர்களுக்குக் காண்பிப்பார்களாம். அதனைப் புரிந்து கொண்ட பெண்களும் அவர்களை நெருங்கிய நண்பராக மாத்திரம் ஏற்றுக் கொள்வார்களாம்.
ஆண்களுக்கான "கடுக்கன்" வகை பொதுவான காதணிகள்
எந்தக் காதில் ஆண்கள் கடுக்கன் அணியலாம்? சாதி, தொழில் சார்ந்த தோடு அணியும் ஆண்கள் இடது பக்க காதில் தோடு அணியலாம்.
பொதுவாகவே தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் அல்லது தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ள ஆண்கள் வலது பக்க காதிலேயே காதணியை(Earrings) 20 ஆம் நூற்றாண்டுகளில் அணிந்தார்கள்.
அதற்குக் காரணம் இருபதாம் நூற்றாண்டில் Gay, Bisexual ஆண்களை யாரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை. மறைமுகமாகவே இவர்கள் தம்மை வெளிக்காட்டினார்கள். ஆனால் இந்த வகை Gay Code தற்போது பெரியளவில் உபயோகத்தில்(Outdated) இல்லை. அதற்குக் காரணம் மேலேத்தேய நாடுகளில் Gay, Bisexual ஆண்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கான சம உரிமைகளை வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.
Right Ear is Gay Ear - வலது காதில் தோடு அணிவது உங்களை தன்னினச்சேர்க்கையில் ஆர்வமுள்ளவராக அடையாளம் காட்டும்.
Left Ear is for Common - இடது காதில் Straight ஆண்களும் தோடு, கடுக்கன் அணியலாம்.
தமிழ் ஆண்கள் அணியும் கடுக்கன் வகை தோடு
இதனை Fashion, Trend என தவறாகப் புரிந்து கொண்ட நம்மில் பலர் கூட அவ்வாறான வளையங்களை காதில் காதணியாக அணிகிறோம். அதில் தவறில்லை.
ஆனால், இந்த தோடு விஷயம் தெரிந்தவர்கள் யாராவது உங்களைப் பார்த்தால், உங்களைப் பற்றி தவறாக நினைக்கக் கூடும். சில தர்மசங்கடமான நிலைக்கு உங்களை அவர்கள் தள்ளலாம்.
Read More: வயது வந்த ஆண்கள் தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்டுவதற்கு சில உதவிக் குறிப்புகள்
தமிழ் ஆண்களின் கடுக்கண் அணியும் கலாச்சாரம்
தமிழர் மரபில் பெண்கள் காதில் அணியும் அணிகலனை தோடு எனக் கூறுவது மாதிரி ஆண்கள் தம் காதுகளில் அணிவதை கடுக்கண் என அழைத்தனர்.
தமிழிய மரபின் வாழ்வியல் அம்சங்களை உற்று நோக்கினால் தமிழின் நுட்பமும் வாழ்வியலின் நுட்பமும் சொற்களினாலும் நடைமுறையினாலும் விளங்கியிருக்கக் காணலாம். ஆண் பிள்ளைகளின் பருவத்தை அவர்கள்
பாலன் - 7 வயதுக்கு கீழ்
மீளி - 10 வயதுக்குக் கீழ்
மறவோன் - 14 வயதுக்குக் கீழ்
திறலோன் - 14 வயதுக்கு மேல்
காளை - 18 வயதுக்கு கீழ்
விடலை - 30 வயதுக்குக் கீழ்
முதுமகன் - 30 வயதுக்கு மேல்
என்றும்;
பெண் பிள்ளைகளின் பருவத்தை அவர்கள்,
பேதை - 5 வயதுக்குக் கீழ்
பெதும்பை - 10 வயதுக்குக் கீழ்
மங்கை - 16 வயதிற்குக் கீழ்
மடந்தை - 25 வயதிற்குக் கீழ்
அரிவை - 30 வயதிற்குக் கீழ்
தெரிவை - 35 வயதிற்குக் கீழ்
பேரிளம் பெண் - 55 வயதிற்குக் கீழ்
எனவும் ஏழு ஏழு பருவங்களாகப் பிரித்திருந்தார்கள்.
அது போல அவர்கள் அணிகின்ற அணிகலன்களையும் தனித்தனியாகப் பிரித்திருக்கிறார்கள். ஆண்கள் அணியும் அணிகலன்கள் கீழ் வருமாறு வகைப்படுத்தப்பட்டிருந்தன.
ஆண்களின் அணிகலன்கள்: வீரக் கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்துவடம்,. கடுக்கண், குண்டலம் ஆகியனவாகும்.
இந்துத் தமிழ் திருமணங்களின் போது மணமகனாகப் போகும் ஆண்மகனுக்கு இக்கடுக்கண் பூணும் வைபவம் ஒரு சடங்காக அமைந்திருந்தது.
மணமகனுக்கு தலைப்பாகை வைக்கும் சடங்குக்கு முன் கடுக்கண் பூணும் கிரியை நடக்கும். மணமகனை கிழக்கு முகமாக அமர்த்தி விநாயக வழிபாடு செய்து தேங்காய் உடைத்து இக்கடுக்கண் பூட்டு வைபவம் நடந்தது. அது மணமகனின் தாய்மானனால் நடாத்தி வைக்கப்பட்டது.
கடுக்கண் குத்திய அனுபவ பதிவு: தோடு கடுக்கணாக மாறிய தருணம்
திருமணத்திற்கு முன்பு காது குத்தியே ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் வீட்டில். அதனால் கல்லூரி படிப்பின் போதே காது குத்திக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்.
திருப்பதி போன போது அங்கே குத்துவதற்கு ஒத்துக்கொண்டேன்.. அங்கு தான் எனக்கு இருந்தது அதிர்ச்சி.. படத்தில் உள்ளது போன்ற கடுக்கணை தான் எதிர்பாத்திருந்தேன் நான்..
ஆனால் என் அம்மா பெண்கள் அணிவது போல பெரிய வட்ட வடிவிலான தோடு ஒன்றை எடுத்துக்கொடுக்க, ஆசாரி அதில் ஊசி வைத்து உடனே என் காதில் இறக்கி விட்டார்..
அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் இன்னொரு காதிலும் இறக்கி விட்டார்கள். நான் இயல்பு நிலைக்கு திரும்பினேன். திருகாணி மாட்டிக்கொண்டிருந்தார்கள்.. ஒரு பக்கம் நானே திருகாணி சுற்றிக்கொண்டிருந்தேன்.. (நகை விளம்பரங்களில் பெண்கள் திருகாணி மாட்டிக்கொள்ளும் காட்சி வருமே அந்த நினைவுகள் போல தான்)
முடித்து விட்டு அலைபேசியில் இருந்த கேமராவில் தான் முகத்தை பார்த்தேன்.. சட்டென்று அடையாளமே தெரியவில்லை.. இவ்வளவு நாட்கள் பெண்கள் காதில் தவழும் தோடுகளை பார்த்து ரசித்த எனக்கு என்னுடைய காதில் பெரிய தோடுகளைக் (அதில் தொங்கட்டான் ஜிமிக்கி மட்டும் தான் இல்லை) கண்டவுடன் புன்னகை கலந்த அழுகை தான்!
21 நாட்கள் கண்டிப்பாக அணியவேண்டுமாம்.. நல்லவேளை கல்லூரி ஒரு மாதம் விடுமுறை என்பதால் வீட்டுக்குள் இருந்தே சமாளித்துக்கொண்டேன்..
ஒரு வழியாக ஒரு மாதம் பின்னர் அதை கழட்டினேன்.. இரண்டு காதுகளிலும் பின் பக்கம் தெரியும் அளவுக்கு ஓட்டைகள்..கிட்டத்தட்ட ஒரு வருடம் அப்படியே தொடர்ந்தது..
கழட்டியவுடன் தான் தோடுகளை Miss செய்ய ஆரம்பித்தேன்..
இது போன்ற கடுக்கண் போட்டுக்கொள்ளவேண்டும் என்று ஆசை..
அதனால் இடது காதில் மாத்திரம் தங்கத்தில் கல்லு வைத்த கடுக்கண் அணிந்தேன். ஏதோ ஒரு ஞாபகத்தில் வலது காதில் இருந்த ஓட்டையை மறந்து விட்டேன். காலப்போக்கில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வலது காதில் தோடு அணியாமல் இருந்து விட்டதால் ஓட்டை தூர்ந்து விட்டது இப்போது. இப்ப மறுபடியும் வலது காதில் காது குத்த வேண்டும் போல..
Keywords: கடுக்கண்
Comments
Post a Comment